< Back
மாநில செய்திகள்
பாலத்தின் பக்கவாட்டு சுவர் மீது படுத்திருந்தவர் தவறி விழுந்து சாவு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பாலத்தின் பக்கவாட்டு சுவர் மீது படுத்திருந்தவர் தவறி விழுந்து சாவு

தினத்தந்தி
|
30 Jun 2023 7:57 PM GMT

பாலத்தின் பக்கவாட்டு சுவர் மீது படுத்திருந்தவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள ராயப்பா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 39). இவர் நேற்று முன்தினம் இரவு ராயப்பா நகர் பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் பக்கவாட்டு சுவரில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சுவற்றில் இருந்து தவறி கீழே உள்ள சாக்கடையில் விழுந்துள்ளார். இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வி.களத்தூர் போலீசார் வெங்கடேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்