< Back
மாநில செய்திகள்
நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்

தினத்தந்தி
|
18 May 2023 4:04 PM GMT

கோபால்பட்டி அருகே நடுவழியில் அரசு பஸ் பழுதாகி நின்றது.

கோபால்பட்டி அருகே உள்ள ேக.அய்யாபட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் விலக்கு ரோடு என்னுமிடத்தில் வந்தபோது, என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டு நடுவழியில் பழுதாகி நின்றது. உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகளை வேறு பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் மாலை நேரத்தில் வேலை முடிந்து வீடு திரும்பிய தொழிலாளர்கள் மிகவும் அவதிப்பட்டனர். கோபால்பட்டி பகுதியில் தொடர்ந்து இதுபோன்ற பழுதான பஸ்கள் இயக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். எனவே நல்ல முறையில் இயங்க கூடிய பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்