< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா
|8 Aug 2023 8:31 PM GMT
கரம்பயம் ஊராட்சி அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
கரம்பயம்:
பட்டுக்கோட்டை அருகே கரம்பயம் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆனந்தகுமார் தலைமை தாங்கி 40 மாணவர்களுக்கும், 43 மாணவிகளுக்கும் என மொத்தம் 83 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிமாறன், உதவி தலைமை ஆசிரியர் ஜெயவேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், பள்ளி வளர்ச்சிக்குழு பொறுப்பாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரிய, ஆசிரியர்கள் செய்திருந்தனர்.