< Back
மாநில செய்திகள்
ஆவடி அருகே துரித உணவக கடையில் தீ விபத்து...!
சென்னை
மாநில செய்திகள்

ஆவடி அருகே துரித உணவக கடையில் தீ விபத்து...!

தினத்தந்தி
|
21 May 2022 2:31 PM GMT

ஆவடி அருகே துரித உணவக கடையில் பற்றிய தீயை தீணைப்பு வீரர்கள் அணைத்து உள்ளனர்.


சென்னை ஆவடி அடுத்த வெள்ளானூர் 2-வது தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 30). இவர் வெள்ளனூர் சந்திப்பில் துரித உணவு கடை மற்றும் அத்துடன் இணைந்தபடி பங்க் கடை ஆகியவற்றை வைத்து நடத்தி வந்துள்ளார். கடந்த 3 மாதங்களாக கடையில் மாஸ்டர் இல்லாததால் கடையை பூட்டி வைத்திருந்தார். இந்நிலையில் இன்று மாலை திடீரென கடையின் கூரையிலிருந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

சிறிது நேரத்தில் தீயானது குடிசை முழுவதும் பரவி மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்