< Back
மாநில செய்திகள்
சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இன்று ஒரே நாளில் ரூ.1.16 லட்சம் அபராதம் வசூல்
மாநில செய்திகள்

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இன்று ஒரே நாளில் ரூ.1.16 லட்சம் அபராதம் வசூல்

தினத்தந்தி
|
7 July 2022 3:28 PM GMT

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னை,

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அனைவரும் முககவசம் அணிவது கட்டாயம் என்றும் மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இன்று ஒரே நாளில் 1,16,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மொத்தம் மண்டலம் 15-ல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மண்டலம் 1-ல் குறைந்தபட்சமாக 5 பேருக்கு ரூபாய் 2,500ம், மண்டலம் 5-ல் அதிகபட்சமாக 33 பேருக்கு ரூபாய் 16,500ம் விதிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்