< Back
மாநில செய்திகள்
கழுகுமலையில்ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த விவசாயி படுகாயம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கழுகுமலையில்ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த விவசாயி படுகாயம்

தினத்தந்தி
|
6 Aug 2023 6:45 PM GMT

கழுகுமலையில்ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த விவசாயி படுகாயம் அடைந்துள்ளார்.

கழுகுமலை:

கழுகுமலை அருகே உள்ள குளக்கட்டாகுறிச்சி முதல் தெருவை சேர்ந்தவர் ராமசாமி வயது (வயது 73). விவசாயியான இவர் நேற்று முன்தினம் கோவில்பட்டியில் இருந்து கழுகுமலைக்கு தனியார் பஸ்சில் சென்று கெண்டிருந்தார். பஸ்சின் பின் சீட்டில் உட்கார்ந்தபடி பயணம் செய்துள்ளார். அப்போது கழுகுமலை அருகே பகவத்சிங் தெரு பகுதியில் உள்ள பாலம் பகுதியிலுள்ள வளைவில் பஸ் திரும்பியுள்ளது. அப்போது பின் சீட்டில் உட்கார்ந்திருந்த ராமசாமி நிலை தடுமாறி படிக்கட்டு வழியாக உருண்டு சென்று சாலையில் விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த கழுகுமலை போலீசார் அவரை உடனடியாக மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவரான திருவேங்கடம் அருகே உள்ள உமையத்தலைவன்பட்டியை சேர்ந்த கண்ணன் மகன் பேச்சிமுத்து (25) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்