< Back
மாநில செய்திகள்
ஒரே நாளில் 7 பேரை நாய் கடித்தது
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

ஒரே நாளில் 7 பேரை நாய் கடித்தது

தினத்தந்தி
|
12 March 2023 6:45 PM GMT

திருக்காட்டுப்பள்ளியில் ஒரே நாளில் 7 பேரை நாய் கடித்தது ஆஸ்பத்திரியில் சிகிச்சை

திருக்காட்டுப்பள்ளி:

திருக்காட்டுப்பள்ளி மெயின் ரோடு பகுதியில் நேற்று ஒரு நாய் அந்த பகுதி வழியாக வந்த 6 பேரை கடித்துள்ளது. மேலும் ஒன்பத்துவேலி கிராமத்தில் ஒருவரை கடித்துள்ளது. நாய் கடித்த 7 பேரும் திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். திருக்காட்டுப்பள்ளி பகுதி சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 7 பேரை நாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்