< Back
மாநில செய்திகள்
இரு தரப்பினரிடையே தகராறு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

இரு தரப்பினரிடையே தகராறு

தினத்தந்தி
|
12 Sep 2022 4:53 PM GMT

உளுந்தூர்பேட்டையில் இரு தரப்பினரிடையே தகராறு கணவன்-மனைவி உள்பட 4 பேர் மீது வழக்கு

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் வேலு(வயது 40). இவர் அந்த பகுதியில் உள்ள வளாகம் ஒன்றில் பல ஆண்டுகளாக மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பக்கத்தில் உளுந்தூர்பேட்டை அன்னை தெரசாநகர் பகுதியை சேர்ந்த முகமது ஜாபர்(47) என்பவர் புதியதாக மளிகை கடை ஒன்றை திறந்துள்ளார். இவர் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் செய்து வருவதால் வேலுவின் கடையில் வியாபாரம் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று இது தொடர்பான பிரச்சினையால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். பின்னர் இது குறித்து இரு தரப்பினரும் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் தனித்தனியே புகார் அளித்தனர். இதில் முகமது ஜாபர் கொடுத்த புகாரின் பேரில் வேலு, இவரது மனைவி ரம்யா, வேலு கொடுத்த புகாரின் பேரில் முகமது ஜாபரின் 15 வயது மகன் மற்றும் 18 வயது மகள் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்