< Back
மாநில செய்திகள்
சிதம்பரம் அருகே தோட்டத்திற்குள் புகுந்த முதலை
கடலூர்
மாநில செய்திகள்

சிதம்பரம் அருகே தோட்டத்திற்குள் புகுந்த முதலை

தினத்தந்தி
|
12 Oct 2023 6:45 PM GMT

சிதம்பரம் அருகே தோட்டத்திற்குள் புகுந்த முதலை பிடிபட்டது

சிதம்பரம்,

சிதம்பரம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன. இந்த ஆற்றில் உள்ள கிளை வாய்க்காலில் இருந்து அவ்வப்போது, முதலைகள் வெளியேறி ஊருக்குள் புகுந்து விடுவதும், பின்னர் அந்த முதலைகளை வனத்துறையினர் பிடித்து நீர்த்தேக்கத்தில் விடுவதும் வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் நேற்றும் ஒரு முதலை பிடிபட்டது. அதன் விவரம் வருமாறு:-

சிதம்பரம் அருகே உள்ள இளநாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய வீட்டின் அருகே தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் நேற்று காலை முதலை ஒன்று கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த காமராஜ், இது குறித்து வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

நீர்த்தேக்கத்தில் விடப்பட்டது

அதன்பேரில் கடலூர் மாவட்ட வன அலுவலர் குருசாமி உத்தரவின் படி சிதம்பரம் வனச்சரக அலுவலர் கோ.வசந்த் பாஸ்கர் தலைமையில் சிதம்பரம் பிரிவு வனவர் பிரபு, வனக்காப்பாளர்கள் அன்புமணி, ஞானசேகர், அலமேலு, வன ஊழியர்கள் புஷ்பராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் கயிறு மூலம் முதலையை பிடித்தனர். இந்த முதலை 9 அடி நீளமும், 140 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. இதையடுத்து பிடிபட்ட முதலை வக்காரமாரி நீர்த்தேக்கத்தில் விடப்பட்டது.

மேலும் செய்திகள்