< Back
மாநில செய்திகள்
2 கன்றுகளை ஈன்ற பசு
திருச்சி
மாநில செய்திகள்

2 கன்றுகளை ஈன்ற பசு

தினத்தந்தி
|
6 Aug 2023 8:24 PM GMT

2 கன்றுகளை ஒரு பசு ஈன்றது.

திருவெறும்பூர்:

திருவெறும்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழமுல்லக்குடி ஊராட்சி ஒட்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பசு மாடுகளை வளர்த்து, பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவரது பண்ணையில் சினையாக இருந்த ஒரு பசுமாடு நேற்று 2 கன்றுக்குட்டிகளை ஈன்றது. இதையறிந்த அப்பகுதி மக்கள், மாடு மற்றும் கன்றுக்குட்டிகளை ஆர்வத்துடன் சென்று பார்த்து சென்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்