< Back
மாநில செய்திகள்
அரக்கோணம் அருகே நள்ளிரவில் செல்போன் நிறுவன ஊழியர் குத்திக்கொலை
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

அரக்கோணம் அருகே நள்ளிரவில் செல்போன் நிறுவன ஊழியர் குத்திக்கொலை

தினத்தந்தி
|
16 July 2022 5:08 PM GMT

அரக்கோணம் அருகே நள்ளிரவில் வேலை முடிந்து திரும்பிய செல்போன் நிறுவன ஊழியர் மர்மநபரால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

அரக்கோணம்

அரக்கோணம் அருகே நள்ளிரவில் வேலை முடிந்து திரும்பிய செல்போன் நிறுவன ஊழியர் மர்மநபரால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

ரெயில்வே ஊழியர் மகன்

வேலூர் மாநகராட்சி காட்பாடி தாராபடவேடு முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் எட்வின். ரெயில்வே துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் இமானுவேல் (வயது 23) காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இம்மானுவேல் அரக்கோணத்தில் உள்ள அவரது பெரியம்மா வீட்டில் தங்கி அங்கிருந்து செல்போன் நிறுவன பஸ் மூலமாக வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் பணி முடிந்து நேற்று பின்னிரவு 1.30 மணியளவில் நிறுவன பஸ்சில்அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் பகுதியில் இறங்கினார்.

குத்திக்கொலை

அங்கிருந்து அவர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். பழனிபேட்டை பிரதான சாலையில் சென்றபோது மர்ம நபர் ஒருவர் இமானுவேலை மறித்து கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் இம்மானுவேல் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டவுன் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து முன் விரோதம் ஏதேனும் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்