< Back
மாநில செய்திகள்
வாலிபரை கத்தியால் குத்திய 4 பேர் மீது வழக்கு
திருச்சி
மாநில செய்திகள்

வாலிபரை கத்தியால் குத்திய 4 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
12 Jun 2023 7:50 PM GMT

வாலிபரை கத்தியால் குத்திய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், தாளக்குடி பகுதியை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் மணிகண்டன் (வயது 30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மனோஜ் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை சம்பந்தமாக நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த தாளக்குடி வாழக்கட்டை பகுதியை சேர்ந்த குமாரின் மகன் சூர்யா என்ற அஜீத்குமார் (23) தகராறில் ஈடுபட்டவர்களை தடுத்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மணிகண்டன் உள்ளிட்ட சிலர் கத்தியால் அவரை குத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அஜீத்குமார் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அஜீத்குமாரின் தாய் அன்புச்செல்வி அளித்த புகாரின்பேரில் கொள்ளிடம் போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டன், அவரது ஆதரவாளர்களான கனகராஜ் (44), இவரது மகன் விக்னேஷ் (23), செல்வராஜ் மகன் சதீஷ் (30) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்