< Back
மாநில செய்திகள்
வாய்க்காலில் மூழ்கி கிடந்த கார்
திருச்சி
மாநில செய்திகள்

வாய்க்காலில் மூழ்கி கிடந்த கார்

தினத்தந்தி
|
3 Nov 2022 9:23 PM GMT

வாய்க்காலில் கார் மூழ்கி கிடந்தது.

கொள்ளிடம் டோல்கேட்:

திருச்சி கல்லணை சாலையில் உத்தமர்சீலி அருகே உள்ள வாய்க்காலில் சொகுசு கார் ஒன்று தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடப்பதாக கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அந்த காரை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில், அந்த காரில் வந்தவர்கள் குறித்தும், விபத்து ஏற்பட்டு அந்த கார் வாய்க்காலில் இறங்கி மூழ்கியதா? என்பது குறித்தும் எந்த தகவலும் உடனடியாக போலீசாருக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கல்லணை வழியாக திருச்சி நோக்கி வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் உருண்டு வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்நிலையில் கார் வாய்க்காலில் மூழ்கி கிடக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டதால், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்