< Back
மாநில செய்திகள்
நட்சத்திர ஓட்டலில் தீப்பற்றி எரிந்த கார்
தேனி
மாநில செய்திகள்

நட்சத்திர ஓட்டலில் தீப்பற்றி எரிந்த கார்

தினத்தந்தி
|
26 Oct 2022 6:45 PM GMT

தேனி அருகே நட்சத்திர ஓட்டலில் நின்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந்தது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் கண்ணன். இவர், தனது சகோதரர் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக நேற்று தேனிக்கு காரில் வந்தார். தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அவர் சாப்பிட சென்றார். அந்த ஓட்டலில், வாகனம் நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார். அப்போது திடீரென அவருடைய காரில் இருந்து புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் கார் மள, மளவென தீப்பற்றி எரிந்தது. அப்போது அங்கு நின்றவர்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தத தேனி தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் காரின் பெரும் பகுதி எரிந்து நாசம் ஆகிவிட்டது. இதில் கார் எலும்புக்கூடு போல் மாறி விட்டது. கார் தீப்பற்றி எரிந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்