< Back
மாநில செய்திகள்
ஆசிரியையிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

ஆசிரியையிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

தினத்தந்தி
|
27 Sep 2023 6:02 PM GMT

ஆசிரியையிடம் 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரியலூர் டவுன் குபேரன் நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி மனைவி சுபாஷினி (வயது 37). ஆசிரியையான இவர் பாலாம்பாடி அருகே மொபட்டில் சென்றபோது, அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை 2 மர்ம வாலிபர்கள் பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்