< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
பெண்ணிடம் 4¾ பவுன் சங்கிலி பறிப்பு
|9 Nov 2022 7:58 PM GMT
பெண்ணிடம் 4¾ பவுன் சங்கிலி பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி உறையூர் தியாகராய நகர் பகுதியை சோ்ந்தவர் வாசுகி(வயது 52). இவர் சம்பவத்தன்று தனது சைக்கிளில் உறையூர் நாச்சியார் கோவில் பஸ்நிறுத்தம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 மர்மநபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 4¾ பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து வாசுகி கொடுத்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.