< Back
மாநில செய்திகள்
சென்னை: மின்சார ரெயிலில் வடமாநிலத்தவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 17 வயது சிறுவன்
மாநில செய்திகள்

சென்னை: மின்சார ரெயிலில் வடமாநிலத்தவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 17 வயது சிறுவன்

தினத்தந்தி
|
30 Dec 2023 11:25 AM GMT

விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது சேப்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

சென்னை,

நேற்று சென்னை பீச் ரெயில் நிலையத்திலிருந்து, செங்கல்பட்டு நோக்கி மின்சார ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ரெயிலானது நுங்கம்பாக்கம்-கோடம்பாக்கம் இடையே கடக்கும்போது ரெயிலில் இருந்த நபர் ஒருவர், வட மாநிலத்தவர்களை குறி வைத்து தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டார்.

அவர்களிடமிருந்து செல்போன், பணம், நகைகள் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டார். இது குறித்து அந்த ரெயிலில் பயணம் செய்த பயணி ஒருவர், வீடியோ எடுத்து ஆதாரத்துடன் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது சேப்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் அவன் மீது ஏற்கனவே வழிப்பறி வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்