< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
|23 Nov 2022 5:24 PM GMT
ஆம்பூரில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆம்பூர் காந்திநகர் எஸ்.கே.ரோடு பகுதியை சேர்ந்தவர் கயல்விழி (வயது 14). இவர் ஓசூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த மாணவி உடல் பிரச்சினை காரணமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் உள்ள அறையில் கயல்விழி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் டவுன் போலீசார் கயல்விழி உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.