< Back
மாநில செய்திகள்
9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம்
மாநில செய்திகள்

9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
16 Aug 2023 7:06 PM GMT

சேலம் இரும்பாலை அருகே 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

சூரமங்கலம்

பள்ளி மாணவன்

சேலம் இரும்பாலை அருகே உள்ள மாரமங்கலத்துப்பட்டி புதூர் கீரைபாப்பம்பாடி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், கயிறு திரிக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி வனிதா. இவர்களுக்கு 2 மகள்களும், கோகுல் காந்தி (வயது 14) என்ற மகனும் இருந்தனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. கோகுல் காந்தி அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் செல்வராஜிக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. தினமும் அவர் மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தாராம். இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு வனிதா தனது குழந்தைகளுடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தாயார் வனிதா பிறந்தநாளை கோகுல் காந்தி தனது அக்காள்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடினான். அதன்பிறகு இரவு வீட்டில் அனைவரும் டி.வி. பார்த்து கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் இருந்த படுக்கை அறைக்கு சென்ற கோகுல் காந்தி அங்கிருந்த மின்விசிறியில் துண்டால் தூக்குப்போட்டு கொண்டான். எனினும் பாரம் தாங்காமல் கீழே விழுந்து விட்டான்.

விசாரணை

இதனிடையே கீழே விழுந்ததில் வலியில் அவன் அலறினான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார், அக்காள்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கோகுல் காந்தியை மீட்டு இரும்பாலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து வரும் வழியிலேயே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தந்தையை விட்டு தாய் பிரிந்ததால் கோகுல் காந்தி மனஉளைச்சலில் இருந்ததாகவும், அவனுக்கு ஆஸ்துமா நோய் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மாணவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்