< Back
மாநில செய்திகள்
விஷ வண்டுகள் கடித்து 9 பேர் காயம்
கடலூர்
மாநில செய்திகள்

விஷ வண்டுகள் கடித்து 9 பேர் காயம்

தினத்தந்தி
|
29 March 2023 7:21 PM GMT

சிதம்பரத்தில் விஷ வண்டுகள் கடித்து 9 பேர் காயமடைந்தனர்.

சிதம்பரம், மார்ச்.30-சிதம்பரம் அருகே சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓமக்குளம் தச்சன் தெருவில் உள்ள புளிய மரத்தில் விஷ வண்டுகள் கூடுகட்டியுள்ளன. இந்த வண்டுகள் நேற்று மதியம் திடீரென கலைந்தது. இதில் அந்த வண்டுகள் அந்த பகுதியில் சென்றவர்களை விரட்டி, விரட்டி கடித்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர்கள் அலறி அடித்து ஓடினர். இதையடுத்து விஷ வண்டுகள் கடித்ததில் காயமடைந்த அதே பகுதியை சேர்ந்த கர்ப்பணியான ஆர்த்தி (வயது 23) மற்றும் வளர்மதி, தியாகராஜன், புவனேஸ்வரி, கமலா, வனிதா, மதன் உள்பட 9 பேரும் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்