< Back
மாநில செய்திகள்
நிதி நிறுவனத்தில் ரூ.9 கோடி மோசடி
விருதுநகர்
மாநில செய்திகள்

நிதி நிறுவனத்தில் ரூ.9 கோடி மோசடி

தினத்தந்தி
|
27 Jan 2023 7:46 PM GMT

ராஜபாளையத்தில் நிதி நிறுவனத்தில் ரூ.9 கோடி மோசடி செய்யப்பட்டது.

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்த சிலர் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இவர்களிடம் அப்பகுதியை சேர்ந்த 85 பேர் ரூ.9 கோடி வரை பணம் கட்டி உள்ளனர். இந்தநிலையில் நிதி நிறுவன உரிமையாளர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாங்கிய பணத்தை திரும்ப வழங்காமல் கடந்த 8 மாதங்களாக ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய்புரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்