< Back
மாநில செய்திகள்
வாலிபரிடம் ரூ.8 லட்சம் மோசடி
சேலம்
மாநில செய்திகள்

வாலிபரிடம் ரூ.8 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
20 Oct 2022 7:50 PM GMT

ஓமலூர் அருகே வாலிபரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 23). இவர் கடந்த ஆண்டு தனது செல்போனில் ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் நிறுவனத்தின் லிங்க் ஒன்றை பதிவிறக்கம் செய்தார். பின்னர் அவர் அதில் வங்கி கணக்கு எண், ஆதார் மற்றும் பான் கார்டு உள்ளிட்ட தகவலை தெரிவித்து ரூ.62 ஆயிரத்து 990 பெற்றார். இந்த பணத்தை அவர் திரும்ப செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த நிறுவனம் பணம் செலுத்தவில்லை என்று தொடர்ந்து குறுந்தகவல் அனுப்பியது. இதற்கிடையில் அவருடைய புகைப்படத்தை மார்பிங் செய்து பல்வேறு செல்போன் எண்கள் மூலம் கணபதிக்கு அனுப்பி மிரட்டல் விடுத்தது. இதனால் பயந்து போன அவர் மீண்டும் ரூ.8 லட்சத்து 14 ஆயிரத்து 860 வரை செலுத்தினார். இருந்தாலும் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் இந்த மோசடி குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கணபதி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைலாசம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்