< Back
மாநில செய்திகள்
சரக்கு வேன் மீது கார் மோதி 8 பேர் காயம்
கரூர்
மாநில செய்திகள்

சரக்கு வேன் மீது கார் மோதி 8 பேர் காயம்

தினத்தந்தி
|
21 April 2023 6:53 PM GMT

சரக்கு வேன் மீது கார் மோதி 8 பேர் காயம் அடைந்தனர்.

குளித்தலை அருகே உள்ள தண்ணீர் பள்ளி பகுதியில் சரக்கு வேன் ஒன்று சம்பவத்தன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் எதிரே வந்த கார் சரக்கு வேன் மீது மோதியது. இந்த விபத்தில் சரக்கு வேனில் பயணம் செய்த திண்டுக்கல் மாவட்டம் செம்படைப்பட்டி பகுதியை சேர்ந்த ராணி (வயது 53), மூலனூர் பகுதியை சேர்ந்த தாரணி (19), பரணி (21), முகிலரசன் (4), முருகாம்பாள் (60), சரக்கு வேன் டிரைவர் பிரபு (39), பழனியம்மாள் (70), அன்புக்கரசு (19), கன்னி லட்சுமி (39) ஆகிய 8 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்