< Back
மாநில செய்திகள்
விருந்து சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி, மயக்கம்
திருவாரூர்
மாநில செய்திகள்

விருந்து சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி, மயக்கம்

தினத்தந்தி
|
6 Oct 2022 7:00 PM GMT

திருவாரூர் அருகே விருந்து சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருவாரூர் அருகே விருந்து சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விருந்து

திருவாரூர் அருகே உள்ள திருவாசல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த செல்லதுரை என்பவரின் மகன் விக்னேஷ். இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது26). இவர் 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் இவருக்கு 5-ம் மாதம் மருந்து கொடுக்கும் நிகழ்வு விக்னேஷ் வீட்டில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்த பின்பு அவர்களுக்கு 5 வகை சாதம் ஆகியவற்றுடன் பிரியாணி பரிமாறப்பட்டது. இந்த விருந்தில் உணவருந்திய சிறிது நேரத்தில் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.

8 பேருக்கு சிகிச்சை

இதனையடுத்து அவர்களை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் 12 பேர் உடல்நலம் பெற்று வீட்டிற்கு திரும்பினர். வேலங்குடியைச் சேர்ந்த செல்வமுருகன் (24), சந்துரு (10), இளரா (62), செல்வகணபதி (25), பாலாஜி (22) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கர்ப்பிணி மாரியம்மாள், 4 வயது குழந்தை ஆகியோர் திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும மாரியம்மாளின தந்தை ராஜமாணிக்கம் (60) என்பவர் அடியக்கமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையதிதில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்