< Back
மாநில செய்திகள்
6-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

6-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்

தினத்தந்தி
|
25 May 2022 3:36 PM GMT

6-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.

குளச்சல்:

தேங்காப்பட்டணம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவியின் தாயாருக்கு கடந்த மார்ச் மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றார். அப்போது வீட்டில் 6-ம் வகுப்பு மாணவி தனியாக இருந்தார். இந்தநிலையில் தாயின் உறவினரான ரியாஸ் (வயது 26) என்பவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

அதன்பிறகு அவர் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதனை தாயிடம் கூறிய மாணவி, கதறி அழுதுள்ளார். இந்த கொடுமையை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் இதுகுறித்து குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரியாஸை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்