< Back
மாநில செய்திகள்
கேரளாவுக்கு கடத்த முயன்ற  600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தினத்தந்தி
|
11 March 2023 6:45 PM GMT

கேரளாவுக்கு கடத்த முயன்ற 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

அழகியமண்டபம், மார்ச்.12-

கேரளாவுக்கு கடத்த முயன்ற 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ரேஷன்அரிசி பறிமுதல்

குமரி மாவட்ட பறக்கும் படை தாசில்தார் சுரேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் செய்து அலி மற்றும் அதிகாரிகள் திங்கள்சந்தை, குளச்சல் மற்றும் வாணியக்குடி போன்ற பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வாணியக்குடியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அந்த வீட்டை சோதனை செய்தபோது 29 மூட்டைகளில் 600 கிேலா ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அரிசி மூடைகளை பறிமுதல் செய்து அரசு குடோனில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்