< Back
மாநில செய்திகள்
பொதுமக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் 569 மனுக்கள் பெறப்பட்டன
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

பொதுமக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் 569 மனுக்கள் பெறப்பட்டன

தினத்தந்தி
|
6 Feb 2023 8:09 PM GMT

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் 569 மனுக்கள் பெறப்பட்டன.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 569 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர், அதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனிஸ்வரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்