< Back
மாநில செய்திகள்
தமிழக எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் மீது 561 வழக்குகள் - ஐகோர்ட்டில் அரசு தகவல்
மாநில செய்திகள்

தமிழக எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் மீது 561 வழக்குகள் - ஐகோர்ட்டில் அரசு தகவல்

தினத்தந்தி
|
2 April 2024 10:42 AM GMT

20 ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளில் 9 வழக்குகள் சாட்சி விசாரணை முடியும் நிலையில் உள்ளன.

சென்னை,

நாடாளுமன்ற எம்.பி.க்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள குற்ற வழக்குகள் குறித்து கண்காணிக்க வேண்டும். தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு மாநில ஐகோர்ட்டுகளை வலியுறுத்தியது.அந்த வகையில் சென்னை ஐகோர்ட்டு இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. அது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழக எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் மீது 561 வழக்குகள் உள்ளன. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 வழக்குகள் உள்ளன. 20 ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளில் 9 வழக்குகள் சாட்சி விசாரணை முடியும் நிலையில் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் பதிவுக்காக உள்ள வழக்குகளில் விரைந்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும். புலன் விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என கோர்ட்டு தெரிவித்தது. மேலும் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜூன் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

மேலும் செய்திகள்