< Back
மாநில செய்திகள்
பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
திருச்சி
மாநில செய்திகள்

பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

தினத்தந்தி
|
29 May 2023 10:18 PM GMT

பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது.

திருச்சி தில்லைநகர் 11-வது குறுக்கு பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன். இவருடைய மனைவி உமாபார்வதி (வயது 40). இவர் சம்பவத்தன்று மாலை தில்லைநகர் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களில் பின்னால் அமர்ந்து இருந்த வாலிபர், உமா பார்வதி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் சங்கிலியை பறித்தார். பின்னர் இரு வாலிபர்களும் அங்கிருந்து வேகமாக தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உமாபார்வதி இது குறித்து தில்லைநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்