< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் மேலும் 5 பேருக்கு கொரோனா
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் மேலும் 5 பேருக்கு கொரோனா

தினத்தந்தி
|
15 Sep 2023 3:14 PM GMT

சென்னைய சேர்ந்த 2 பேருக்கும் கோவையைச் சேர்ந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

சென்னை,

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இன்று 335 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், இன்று சென்னைய சேர்ந்த 2 பேருக்கும் கோவையைச் சேர்ந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இன்று கொரோனா பாதிப்பில் இருந்து யாரும் குணமடைந்து வீடு திரும்பவில்லை. மேலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து. இதேபோல, இன்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்