தமிழக செய்திகள்
சென்னை ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதியாக 5 பேர் பதவி ஏற்பு
தமிழக செய்திகள்

சென்னை ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதியாக 5 பேர் பதவி ஏற்பு

தினத்தந்தி
|
7 March 2023 12:18 AM IST

சென்னை ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதியாக 5 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக இருந்த 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றனர். வக்கீல்களாக இருந்து வந்த எஸ்.ஸ்ரீமதி, டி.பரதசக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோரை சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நியமித்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதன்படி 2021-ம் ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி எஸ்.ஸ்ரீமதி, டி.பரதசக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக் ஆகியோருக்கும், அக்டோபர் 28-ந்தேதி ஜெ.சத்யநாராயண பிரசாத்தும் கூடுதல் நீதிபதிகளாக பதவி ஏற்றனர்.

இந்தநிலையில், இவர்கள் 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் பரிந்துரை செய்னர். இதை ஏற்று, இவர்கள் 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதன்படி 5 கூடுதல் நீதிபதிகளும், நிரந்தர நீதிபதிகளாக நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவி ஏற்பு விழா ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியின் சேம்பரில் வைத்து நடந்தது.

மேலும் செய்திகள்