< Back
மாநில செய்திகள்
43,448 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ  திரவம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

43,448 குழந்தைகளுக்கு 'வைட்டமின் ஏ' திரவம்

தினத்தந்தி
|
18 Sep 2023 6:30 PM GMT

நோய் எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்த 43,448 குழந்தைகளுக்கு ‘வைட்டமின் ஏ’ திரவம் பெரம்பலூரில் இன்று முதல் கொடுக்கப்படுகிறது.

தேசிய 'வைட்டமின் ஏ' திரவ திட்டத்தில் ஆண்டுக்கு 2 முறை 6 மாதம் முதல் 60 மாதம் வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் 'வைட்டமின் ஏ' திரவம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திரவம் குழந்தைகள் சராசரி வளர்ச்சியடைய உதவி செய்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்துகிறது. கண் பார்வை குறைபாடு வராமல் தடுக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 2-ம் தவணையாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 25-ந்தேதி வரை 43 ஆயிரத்து 448 குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் மூலமாக வீடு வீடாக சென்று 'வைட்டமின் ஏ' திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே 6 மாதம் முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 'வைட்டமின் ஏ' திரவம் தவறாது கொடுத்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்