< Back
மாநில செய்திகள்
கீழடி அருங்காட்சியகத்திற்கு கடந்த மாதத்தில் 42 ஆயிரம் பேர் வருகை
சிவகங்கை
மாநில செய்திகள்

கீழடி அருங்காட்சியகத்திற்கு கடந்த மாதத்தில் 42 ஆயிரம் பேர் வருகை

தினத்தந்தி
|
3 Sep 2023 7:09 PM GMT

கீழடி அருங்காட்சியகத்தை கடந்த மாதத்தில் 42 ஆயிரம் பேர் சுற்றி பார்த்தனர்.

திருப்புவனம்

கீழடி அருங்காட்சியகத்தை கடந்த மாதத்தில் 42 ஆயிரம் பேர் சுற்றி பார்த்தனர்.

அருங்காட்சியகம்

தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு பறை சாற்றும் விதமாக கீழடியில் கண்ெடடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் திகழ்கின்றன. இந்த பழங்கால பொருட்கள் கீழடியில் காட்சியப்படுத்தப்பட்டு உள்ளன. கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைத்தார். இதை தொடர்ந்து கீழடி அருங்காட்சியத்தை தொடர்ந்து பொதுமக்கள் பார்த்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி தினமும் சுமார் 1,500 பேர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பழங்கால பொருட்களை பார்வையிட்டு செல்கின்றனர். விடுமுறை காலங்களில் எண்ணிக்கை அதிகரித்து 2 ஆயிரம் பேர் வரை வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

42 ஆயிரம் பேர்

மேலும் இங்குள்ள குளிரூட்டப்பட்ட மினி தியேட்டரில் கீழடி வரலாறு குறித்து 15 நிமிடம் ஓடும் குறும்படத்தையும் பார்வையாளர்கள் அமர்ந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் சுமார் 42 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் ஜூலை மாதம் கடைசி வாரம் முதல் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அருங்காட்சியகத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Tags :
மேலும் செய்திகள்