< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திண்டுக்கல்லில் 420 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் - 4 பேர் மீது வழக்குப்பதிவு
|5 July 2022 5:09 AM GMT
பதப்படுத்தப்பட்ட 420 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தின் சில பகுதிகளில் சரக்கு வாகனங்கள் குட்கா புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தாலுகா அலுவலகம் அருகே சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு நின்றிருந்த சரக்கு வாகனத்தில், பதப்படுத்தப்பட்ட 420 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.