< Back
மாநில செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 4 பேர் கைது
திருச்சி
மாநில செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 4 பேர் கைது

தினத்தந்தி
|
27 Oct 2022 9:04 PM GMT

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீரங்கம் சுப்பிரமணியபுரம் மேற்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார்(வயது 55). இவரது உறவினர் சக்கரவர்த்தியின் மகள், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு ரவிக்குமாரிடம் சாவியை ஒப்படைத்துவிட்டு சென்றார். இந்தநிலையில் சம்பவத்தன்று காலை ரவிக்குமாரின் மனைவி, சக்கரவர்த்தியின் மகள் வீட்டு வழியாக நடந்து சென்றபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி குத்துவிளக்கு, டி.வி.டி. பிளேயர், பாத்திரங்கள் என மொத்தம் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், வீட்டின் பூட்டை உடைத்து திருடியது, ஸ்ரீரங்கம் இந்திராநகரை சேர்ந்த பாலாஜி, தென்கரை பகுதியை சேர்ந்த அம்மாசி, சரவணன், மருதமுத்து என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பொருட்களை மீட்டனர்.

மேலும் செய்திகள்