< Back
மாநில செய்திகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
|4 Nov 2022 6:45 PM GMT
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே கோதவாடி செல்லும் வழியில் உள்ள மைதானத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டம் நடத்திய பொள்ளாச்சி வடுகபாளையத்தை சேர்ந்த வஞ்சிமுத்து(வயது 37), பவதீரன்(27), கோவை ஆலாந்துறை பகுதியை சேர்ந்த விஜயகுமார்(37), குளத்துபுதூரை சேர்ந்த மாணிக்கம்(43) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.68 ஆயிரம் மற்றும் சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.