< Back
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது

தினத்தந்தி
|
8 Jun 2023 11:15 AM GMT

கும்மிடிப்பூண்டியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய 4 பேரையும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சேவல் சண்டை நடைபெற்று வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் நேற்று முன்தினம் வெட்டுகாலனி பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய மெதிப்பாளையத்தை சேர்ந்த சந்துரு (வயது 23), கம்மார்பாளையத்தை சேர்ந்த கலைமணி (30), மங்காவரத்தை சேர்ந்த அஜீத் (26) மற்றும் வெங்கடாதிரிபாளையத்தைச்சேர்ந்த லோகேஷ் (23) ஆகிய 4 பேரை மடக்கி பிடித்தனர். மேலும் இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்