< Back
மாநில செய்திகள்
பெரம்பலூரில் 31-ந்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெரம்பலூரில் 31-ந்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தினத்தந்தி
|
24 May 2023 6:27 PM GMT

விவசாயிகள் குறைதீர் கூட்டம் பெரம்பலூரில் 31-ந்தேதி நடக்கிறது.

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 31-ந்தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் கற்பகம் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில், வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், கடனுதவிகள், வேளாண் இடுபொருட்கள், வேளாண் எந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதால், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

மேலும் செய்திகள்