< Back
மாநில செய்திகள்
30-ந்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர்
மாநில செய்திகள்

30-ந்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தினத்தந்தி
|
27 Jun 2023 6:52 PM GMT

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30-ந்தேதி நடக்கிறது.

கரூர் மாவட்டத்தில் ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் கலெக்டர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தவறாது விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்