< Back
மாநில செய்திகள்
தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை
திண்டுக்கல்
மாநில செய்திகள்

தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை

தினத்தந்தி
|
21 April 2023 7:00 PM GMT

திண்டுக்கல் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்லை அடுத்த கூவனூத்து குரும்பப்பட்டியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 23). கூலித்தொழிலாளி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர், 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சாணார்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்தனர். மேலும் அவர் மீது திண்டுக்கல் விரைவு மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி சரண் விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார். பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், குற்றம்சாட்டப்பட்ட அசோக்குமாருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்