< Back
மாநில செய்திகள்
படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் 3 பேர் மீட்பு
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் 3 பேர் மீட்பு

தினத்தந்தி
|
9 Aug 2023 7:15 PM GMT

வேதாரண்யம் அருகே படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் 3 பேரை போலீசார் மீட்டனர்.

வேதாரண்யம் அருகே படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் 3 பேரை போலீசார் மீட்டனர்.

இலங்கை படகு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் இருந்து 2 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் இலங்கையை சேர்ந்த பைபர் படகு ஒன்று நிற்பதாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம், மீன்வள ஆய்வாளர் நடேசராஜா மற்றும் போலீசார் ஒரு படகில் சென்று அங்கு நின்ற இலங்கைைய சேர்ந்த பைபர் படகை கைப்பற்றி அதில் இருந்த 3 பேரையும் ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

மீனவர்கள் தத்தளிப்பு

விசாரணையில் அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த ரீகன் (வயது45), சிவக்குமார் (25), ஸ்ரீகாந்தன் (45) ஆகியோர் என்பதும், மீனவர்களான இவர்கள் 3 பேரும் மீன்பிடிக்க வந்த போது படகு என்ஜின் பழுதானதால் கடந்த 4 நாட்களாக நடுக்கடலில் தத்தளித்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் 3 பேரும் எல்லை தாண்டி வந்ததாக கூறி வேதாரண்யம் கடலோர குழும போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

'கியூ' பிரிவு போலீசார் விசாரணை

இலங்கையில் இருந்து கடந்த 6-ந் தேதி படகில் புறப்பட்டு என்ஜின் பழுதானதால் 4 நாட்களாக கடலில் தத்தளித்த இவர்கள் உண்மையில் மீனவர்கள் தானா? கஞ்சா கடத்துவதற்காக தமிழகம் வந்தார்களா? அல்லது கடல் கொள்ளையர்களா? என பல்வேறு கோணங்களில் 'கியூ' பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவர்களுடைய படகில் இருந்து என்ஜின், 70 லிட்டர் மண்எண்ணெய், டூல்ஸ் பாக்ஸ், 2 டார்ச் லைட்டுகள், 40 கிலோ வலை, கயிறு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கைதான 3 பேரையும் போலீசார் வேதாரண்யம் ேகார்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் புழல் சிறையில் அடைப்பதற்காக சென்னை அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்