< Back
மாநில செய்திகள்
வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் படுகாயம்
கரூர்
மாநில செய்திகள்

வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
24 May 2022 6:17 PM GMT

வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

நொய்யல்

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள குந்தாணிப்பாளையம் புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் பழனி(வயது 75). கூலித்தொழிலாளி. இவர் தனது சைக்கிளில் குந்தானிபாளையம் தோட்டத்துக்கு சென்றுவிட்டு ஆட்டிற்கு புல் அறுத்துக்கொண்டு சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே திசையில் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நொய்யல் அருகே உள்ள குப்பம்நடுப்பாளையம் பகுதியை சேர்ந்த முனியப்பன் மகன் பிரபுராஜ் (27) என்பவர் பழனி ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியதில் நிலைதடுமாறி பழனியும், பிரபுராஜும் தார் சாலையில் கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிரபுராஜ் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பாவடித்தெரு பகுதியை சேர்ந்தவர் வில்லியம்(வயது 50). கூலித்தொழிலாளி. இவர் பரமத்தி வேலூரிலிருந்து வேலாயுதம்பாளையம் நோக்கி சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாக தக்காளி லோடு ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ வில்லியம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வில்லியம் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் வில்லியத்திற்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்