< Back
மாநில செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
விழுப்புரம்
மாநில செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

தினத்தந்தி
|
17 Jun 2023 6:45 PM GMT

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் அருகே உள்ள ஆயந்தூர் பகுதியில் காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த மணிபாலன் (வயது 39), அய்யப்பன் (34), சங்கர் (47) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்