< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
|26 Oct 2023 8:10 PM GMT
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலுப்பூர் அருகே உள்ள குரும்பட்டி பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குரும்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 33), சங்கர் (45), பெருமாள் (53) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.