< Back
மாநில செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

தினத்தந்தி
|
26 Oct 2023 8:10 PM GMT

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலுப்பூர் அருகே உள்ள குரும்பட்டி பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குரும்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 33), சங்கர் (45), பெருமாள் (53) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்