< Back
மாநில செய்திகள்
கார் மோதி 3 பேர் படுகாயம்
கரூர்
மாநில செய்திகள்

கார் மோதி 3 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
3 March 2023 6:29 PM GMT

கார் மோதி 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள செக்கனம் பகுதியை சேர்ந்தவர்கள் பழனிச்சாமி (வயது 27), பிரகாஷ் (24), ராஜலிங்கம். இவர்கள் 3 பேரும் கிருஷ்ணராயபுரம் பஸ்நிறுத்தம் அருகே நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக கிருஷ்ணராயபுரம் மலையப்ப காலனியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக 3 பேர் மீதும் மோதியதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து 3 பேரும் கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்