< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அந்தமான் நிக்கோபாரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்
|4 July 2022 10:06 AM GMT
அந்தமான் நிக்கோபாரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி,
அந்தமான் நிக்கோபார் அருகே 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. போர்ட் பிளேரிலிருந்து தென் கிழக்கு திசையில் 193 கிமீ தொலைவில் பிற்பகல் 2.06 மணிக்கு நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவுவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் கடற்பகுதியில் பதிவானதால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.