< Back
மாநில செய்திகள்
மக்கள் குறைக்கேட்பு கூட்டத்தில் 284 மனுக்கள் பெறப்பட்டன
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மக்கள் குறைக்கேட்பு கூட்டத்தில் 284 மனுக்கள் பெறப்பட்டன

தினத்தந்தி
|
7 March 2023 12:15 AM IST

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைக்கேட்பு கூட்டத்தில் 284 மனுக்கள் பெறப்பட்டன

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைக்கேட்பு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 284 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அந்த மனுக்களை பெற்ற கலெக்டர் ஷ்ரவன்குமார் அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்