< Back
மாநில செய்திகள்
27-ந்தேதி கினிக்கோழி வளர்ப்பு குறித்து பயிற்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

27-ந்தேதி கினிக்கோழி வளர்ப்பு குறித்து பயிற்சி

தினத்தந்தி
|
20 July 2023 6:45 PM GMT

கினிக்கோழி வளர்ப்பு குறித்து பயிற்சி 27-ந்தேதி நடக்கிறது.

பெரம்பலூர் செங்குணம்-கைக்காட்டி எதிர்புறத்தில், எளம்பலூர் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் விஞ்ஞான முறையில் கினிக்கோழி வளர்ப்பு குறித்த இலவச ஒருநாள் பயிற்சி முகாம் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இதில் விஞ்ஞான முறையில் கினிக்கோழி வளர்ப்பு இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை மற்றும் நோய்த்தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணியளவில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு நேரிலோ அல்லது 9385307022 என்ற செல்ேபானில் தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்து கலந்து கொள்ளுமாறு ஆராய்ச்சி மையத்தின் தலைவரும், பேராசிரியருமான டாக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்