< Back
மாநில செய்திகள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 269 மனுக்கள் பெறப்பட்டன
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 269 மனுக்கள் பெறப்பட்டன

தினத்தந்தி
|
5 Sep 2022 4:20 PM GMT

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 269 மனுக்கள் பெறப்பட்டன

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று அவர்களிடமிருந்து நேர்முக உதவியாளர் 39 மனுக்களை பெற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 230 மனுக்களை பெற்றுக்கொண்டார். மனுக்கள் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) ஹஜிதா பேகம், உதவி ஆணையர்(கலால்) ராஜவேல் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்