< Back
மாநில செய்திகள்
குறுவை சாகுபடிக்காக 2,600 டன் காம்ப்ளக்ஸ், டி.ஏ.பி. உரம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

குறுவை சாகுபடிக்காக 2,600 டன் காம்ப்ளக்ஸ், டி.ஏ.பி. உரம்

தினத்தந்தி
|
27 July 2023 7:00 PM GMT

குஜராத்தில் இருந்து சரக்கு ரெயிலில் தஞ்சைக்கு 2,600 டன் டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் உரம் வந்தது. தஞ்சையிலிருந்து இந்த உரம் 4 மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

குஜராத்தில் இருந்து சரக்கு ரெயிலில் தஞ்சைக்கு 2,600 டன் டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் உரம் வந்தது. தஞ்சையிலிருந்து இந்த உரம் 4 மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.

தற்போது டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. முன்பட்ட குறுவை எனப்படும் இந்த கோடை நெல் சாகுபடி பம்புசெட் மோட்டார் உள்ள பகுதிகளில் மட்டும் நடைபெற்றுள்ளது. அது தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதர பகுதிகளில் குறுவை சாகுபடி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. தற்போது தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 52 அயிரம் ஏக்கர் வரை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

2,600 டன் டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ்

இந்த நிலையில் குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் உரம் 2600 டன் குஜராத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் நேற்று தஞ்சைக்கு வந்தது. 42 வேகன்களில் வந்த இந்த உரங்கள் தஞ்சையில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு கூட்டுறவு விற்பனை நிலையம் மற்றும் சேமிப்புக்கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்